இனியாவது அவளுக்காய்
ஒரு நிழல் ஆடி அடங்கிய பொழுதில் காற்று வீசி கலைத்தது
இல்லாமல் போகின்ற நியாயம் உறைத்தது
இன்னும் சிலகாலம் மட்டுமே என்றும் இல்லை என்றும்
அவள் தனித்துபோனாள் என்பதை உலகம் சொல்லியே அவளுக்கு விளங்கவேண்டியிருந்தது
நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லியே மரங்கள் பூக்கள் போட்டன
எப்போதும் வரும் வாசம் மட்டும் வரவேயில்லை
தினம் மாறும் மனோபாவம் திரும்பவும் கேட்டது
மாற்று மாற்று என்று
அவள் நடந்துபோனாள் இன்றாவது அந்த மர நிழலில் அமருவோம் என்று
ஏனோ அவனுக்கு மட்டும் எப்போதுமே
அம்மரநிழல் இருக்கை பிடித்திருந்திருக்கவில்லை.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment