Wednesday, December 9, 2009

எல்லாம் எதிருமாய்..


West gate bridge,Melbourne.
கோபங்கள் எல்லாவற்றையும் நீயே வெல்லுகிறாய்
மகிழ்வை மட்டுமே எனக்கு கொடுக்கிறாய்


என்னைத்தொலைத்த நேரங்களில் தேடித்தந்த நீ தொலைந்துபோனால் என்ன செய்வது?


காலைகுளிரின் போர்வை அடக்கம் நான், சூரியனின் செல்லம் நீ.


இன்னொருநாளென்பேன் நான், இப்போதே என்பாய் நீ


காலையில் கோப்பி நீ, மதிய உணவு நான்


உறைப்பு என்றால் ஊ..ஊ.. உனக்கு இனிப்பென்றால் ஈ..ஈ..


எல்லாம் எதிருமாய், நாம் மட்டும் ஒன்றாய்...

0 பின்னூட்டங்கள்: