Monday, July 5, 2010

கருப்பாய் காத்திருந்து நெருப்பாய் போனவரே...


மாமழையிலும் மங்கிய ஒளியிலும்
மரங்களுக்கிடையிலும் மதகுக்கரையிலும்
கருப்பாய் காத்திருந்து நெருப்பாய் போனவரே
மெழுகுதிரியால் சுட்டுவிரல் சுட்டவலி பெரிதென்று பீற்றினோம்
நீர்மெழுகோடு மெழுகாய் கருகுகையில் நம்கை வெட்கினோம்
எம்நெஞ்சிலே நீரேற்றிய தீயை அணையவிடாது
காற்றோடு காற்றாய் கடலோடு அலையாய் இருந்து காப்பீராக.

தன்னுயிர்போகும் நாளாறிவர் நேரமறிவர் வகையறிவர்
தன்னிலைமறந்து தாய்மண்வேண்டி தற்கொடை ஈய்ந்த தவப்புதல்வர் தலைவனின் வழியில் தன்நடை பயின்று
தரணியில் தமிழர் தலைநிமிர்வரென்று தமக்குதகனமூட்டியோர்
தம‌க்குள்ளூட்டிய தீயை தமிழர்க்குமூட்டினர் இன்று
அவர்கண் கனவை நனவாக்க‌ மறவர் நாங்கள் ஒருமுறை
மரத்தோம் இனி மறுகண் எடுப்போம் இவர் மறக்கோம்.

நல்வரிகள் நாலு சொல்லி நாமறுக்க முடியவில்லை
நல்வினைகள் செய்ய எண்ணி மாண்டாரை மறக்குதில்லை
என் மனம் மறக்குதில்லை இன்று ஓர் தினம் நினைப்பதற்க்கு
அவர் செய்த காரியங்கள் நினைவிருக்கு இருந்தும் என்றும்
மறக்கவிலா மாமனிதர் அவர் வெளியில் கறுப்பு உடை
உள்ளே வெள்ளையுடை நீ இனி எதிரி கனவுடை.

1 பின்னூட்டங்கள்:

lcnathan said...

ull manaththirkkul eriyum nerppu velippattathaaka karuthukiren! unarcimikuntha varikal!!!