Wednesday, July 28, 2010

இறகு...




ஏதோ ஒன்றைத்தேடி அலையும் மனசு
இருக்கும் இடத்தில் இருந்து எங்கெல்லாமோ போகிறது.
பறக்கும் மனதை ஏதோ ஒன்று கனமாய் கீழே இழுத்துவரப்பார்க்க‌
தன்னந்தனியே ஒற்றை இறகாய் உதிரும் நினைவு ஒன்று
மெல்ல பறந்து வந்து சாலையின் ஓரத்தில் விழுந்து
வேகமாய் சென்ற வாகனக்காற்றில் ஆடி மீண்டும் அடங்கியது.

அவள் அதை எடுத்துப்பார்த்தாள்,கையில் வைத்துக்கொண்டாள்.
சாய்ந்து நடந்து பாதையோர பானக்கடையின் சுவரருகின்
நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
மெல்ல சிறகின் மேலே தன் சிறுவிரலால் தடவினாள்.
பெருமூச்சுவிட்டுக்கொண்டாள், பின் அதை எடுத்து
தன்கைப்பைக்குள்ளே வைத்துக்கொண்டு எழுந்து நடந்தாள்.
நான் பார்க்க என் நினைவிறகு அவளுடன் போனது.
ஒருவேளை அவளும் தன் இறகைத்தொலைத்திருப்பாளா?

நான் மெல்ல நடந்து அவள் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.
மனசு இலேசாக, அருகே அமர்ந்த வெண்புறாவை பார்த்தபடி
அவள் சென்ற திசை நோக்கினேன்,
இன்னொரு இறகு மேலே எழுந்து பறந்தது.

0 பின்னூட்டங்கள்: