Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Tuesday, June 15, 2010

.தேசம் கிடைக்கால் மீளேன்..




காலை தேநீர் அருந்த நீயிருக்கும் மாடிப்படி செடி பூத்த‌
நாள் அன்று நீ கொண்ட ம்கிழ்ச்சி
வான் பெய்த மழையில் வரும் நெகிழ்ச்சி
ஆறு மணி வநதாலும் நீ ஆறி பார்த்ததில்லை
இரவு பகல் என்றாலும் நீ சிரிக்கும் நொடிப்பொழுது
கரையில்லா அலைகள் போல்நீண்டு செல்லும் தேசம்
தரும் பாசம் உறைக்கும்.

எங்கிருந்தோ வந்தாலும் எம்மொழியன் என்றாலும்
உன்னைப்போல உண்மையான அன்புதனை
எந்மொழியாளிடம் பார்த்தில்லை என் மனம் ஈர்த்தில்லை
அடிக்கடி பிரிவென்றாலுமல்லபடும் என்மனம்

இடைக்கிடை இன்பமேயென்று இங்கிதம் கொள்ளுமியல்பு தந்தாய்
சேர்தலும் பின் உதிர்தலும் பின்சேர்ந்துதிர்த‌லுமே காதலெனும்
போதை தந்து கனமான என்னியதம் கனிய‌வைத்தாய்
காக்க வைத்து,காத்துப் பார்த்தாய்,பாதுகாத்தாய் பணிகின்றேன்
சாநிலை வந்தேகினும் நாமறக்கா நின்பெயர் சா மறக்கும்
நிச்சயமாய் நான்வருவேன் நின் நிலை கலைவாய்
நிறை மனம் கொள்ளாய் நீ.

பின்குறிப்பு: நேற்றைய கனவின் பிரதிபலிப்பு இது.